சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

148 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஆகிய பிராதிபதிகம் வேறு; எழுவாய் வேற்றுமையாகும் பிரதமாவிபத்தி வேறு.
பிராதிபதிகம் பிரதமாவிபத்தியாதல் வேண்டும் எனின், சுப்ரத்தியம் புணர்ந்து கெடுதல்
வேண்டும் என்பது வடநூலார் கருத்து.
 

   
 
‘கூறிய சொற்பின் பொருண்மாத் திரத்திற் குலவெழுவாய்
வீறுடை வேற்றுமை எய்தும் ஒருவன் ஒருத்தி ஒன்றின்
ஏறிய சுப்பல விற்சுவ்வும் கள்ளும் எங்கும்அழியும்
ஊறிய சுச்சிறப் புப்பல ரில்கள் ஒழிந்தனவே.’
 
வீ.சோ.33
   
 
‘உன்னும்என்னும் தன்னும் யாவும் அவ் வும்இவ்வும் உவ்வும் எவ்வும்
என்னும் இவற்றின்முன் நீநான்தான் சுவ்வரில் யாமுதல
வன்னும்வள் ளும்துவ்வும் வையும் சிறப்பின் நீர் நாமொடுதாம்
பின்னில்ஐந் தும்வர் பலரில்கள் ளோடுவர் கள்என்பவே!
 
வீ.சோ.37

“பெயர்க்கு ரூபபேதம் காட்டும் வேற்றுமைஉருபு வடமொழிக்கு அல்லது
தமிழ்மொழிக்கு இல்லாமைகண்டு ‘எழுவாய் விபத்தி திரிபில்பெயர்’ என்றாம். ‘எழுவாய்
வேற்றுமை பெயர் தோன்றுநிலையே’ (தொல்.சொல். 65) எழுவாய் உருபு திரிபில்
பெயரே’ (நன்.295) எனத் தொல்காப்பியனாரும் நன்னூலாரும் கூறினார் என்க.

இனி, உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் பெயர் தனித்து நின்றகாலை எழுவாய்
வேற்றுமை ஆகாது என்றும், அது ‘பெயர் தோன்றுநிலை’ என்பதற்கு வலிந்து பயனிலை
தோன்ற நிற்கும் நிலையாகிய அவசரத்தில் எழுவாய் வேற்றுமையாம் என்றும் உரைத்தார்
பெயர்தாம் பயனிலை தோன்ற நின்றால் கர்த்திருகாரகம் என்றும் எழுவாயாவதன்றி
ரூபபேதம் பெற்ற எழுவாய் வேற்றுமை ஆமோ என மறுக்க. அன்றியும் அவ்வாறே
‘நிலங்கடந்தான்’ முதல் ‘குன்றக்கூகை’ இறுதியாக ஆறுருபும் வாராது தத்தம் பயனிலை.