மேலும், ‘ஏற்றும்.....வேற்றுமை’ (நன்.295) எனப்பொருள் வேற்றுமைப்படும் உருபு ஏற்ற பெயரையும் வேற்றுமை என்பர் நன்னூலார். தொல்காப்பியர் ‘உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி’ தொல்.சொல். 102) ‘ஐஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ (தொல்.சொல்.71) என உருபு ஏற்ற பெயரையும் உருபையும் வேற்றுமை என்பர்’ என்றும் அந் நூற்பாவுரையுள் கூறியுள்ளார். எழுவாய் வேற்றுமைபற்றிய சான்றோர் பலருடைய கருத்துக்களையெல்லாம் தொகுத்து, இலக்கணக்கொத்து நூலார், |