சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-40,41153

இருமையும் ஓதாது எழுவாய்க்கே ஓதுதலின் பயனிலை வெளிப்பட்டே நிற்கும்
என்பதாயிற்று.


விளக்கம்

எய்தாதது- எழுவாய் வேற்றுமை மறைந்து நின்றும் பயனிலை கொள்ளும் என்பது.

பெயர் வெளிப்படையாக இருந்து பயனிலை கொள்ளுதலே சிறந்தது; வெளிப்படாது
நின்று பயனிலை கோடலும் சிறந்தது அன்றாயினும் கொள்ளப்படும் என்பது.

செல்வல் என்பது தன்மை ஒருமையையும், இது செய் என்பது முன்னிலை
ஒருமையையும், எழுவாயின் உதவியின்றித் தாமே உணர்த்தும் ஆற்றலுடையன எனினும்,
பேச்சு வழக்கில் எழுவாயையும் இயைத்தே பேசுதல் உள்ளமையால், இவை
போல்வனவற்றிற்குத் தேவையின்றேனும் எழுவாயை இயைத்துப் பேசுதலே சிறந்தது
என்பதாம். எழுவாய் ஒன்றுமே மறைந்து வரலாம், பயனிலை மறைந்து வருதல் கூடாது
என்பதும் இந்நூற்பாவின் போந்த பொருளாகக் கொள்ளப்பட்டவாறு.
 

ஒத்த நூற்பா
 
 

முழுதும்

தொல்.சொல்.68

சேனாவரையர் உரையோடு
.

இரண்டாம் வேற்றுமை
 
199இரண்டா வதன்உருபு ஐயே அதன்பொருள்
இயற்றவும் திரிக்கவும் எய்தவும் படூஉம்
திறத்தவும் பிறவும்ஆம் செயப்படு பொருளே.
 

 

இது நிறுத்த முறையானே இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உணர்த்துகின்றது.