கடி சூத்திரத்துக்குப் பொன்- அவலுக்கு நெல் என்பனபோல உருபு ஏற்கும் பொருள் தானேயாய்த் திரிதல். கூழிற்குக் குற்றேவல் செய்யும்-கூலிக்குக்கூறை ஒலிக்கும்- என்பனபோல ஒன்றனை மேற்பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்த்தலும், சாத்தற்கு மகன்-கொற்றிக்கு மகள்- என்பன போல் ஒன்றற்கு ஒன்று முறை ஆதலும், முதலிய பொருண்மைக்கண் இதற்கு இது என்பது பட நிற்றலாம் என்றவாறு. ‘ஆதி’ என்றதனானே, மாணாக்கற்கு அறிவு கொடுத்தான் என்பது போலக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கண்ணேயே செல்லாது ஆண்டுத் தோன்றுதலும், மாணாக்கர்க்கு நூற்பொருள் உரைத்தான் என்பது போலக் கொடைப் பொருள் குறித்த சொல்லான் அன்றிப் பிற வாய்பாட்டான் கூறுதலும்-ஆகிய கொடைப் பொருண்மைக்கண்ணும், |