சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

172 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’
குறள்.543
  ‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை’
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
‘சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே’
 
குறுந். 113

‘இச்சொற்குப் பொருள் இது, அவற்குச் சோறுஉண்டு, நினக்குவலி வாள்
அவ்வூர்க்கு இவ்வூர்காதம்,
 

  ‘நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்’ கலி. 43
 
 

என ‘இதற்குஇது’ என்பது படவருவன பிறவும் கொள்க.
 

 

விளக்கம்
 

 

நான்காம் எண்ணும் முறைமை- 194 ஆம் நூற்பாச் செய்தி.
                    நேர்ச்சி- ஒன்றற்கு ஒன்றைத் தருவதாக ஒத்துக் கொள்ளுதல்.
                    தகவு- ஒன்றற்கு ஒன்று ஏற்புடைத்தாதல்.

அதுவாதல்- உருபு ஏற்கும் பொருள் தானேயாய்த் திரிதல். அவலுக்கு
நெல்என்புழி, நெல் என்ற பொருள் உருபு ஏற்ற பொருளாகிய அவலாகவே தான் திரிந்து
விடுதல்.

பொருட்டு - ஓர் ஊதியம் கருதி ஒரு தொழில் நிகழ்த்துதல். கூலிக்கு ஆடை
வெளுக்கும் என்புழி, ஆடையை வெளுத்தல்தொழிலைக் கூலியாகிய ஊதியம் கருதி
நிகழ்த்தல் காண்க.

முறை- பிறப்புக் காரணமாக ஏற்படும் தொடர்பு.

மாணாக்கனுக்கு அறிவு கொடுத்தான் என்புழி, ஏனைக் கொடைப்பொருள்
கொடுப்பானை விட்டு நீங்கிக் கொள்வானிடமே செல்லவும், இக் கொடைப்பொருள்
கொடுப்பானையும் விட்டு நீங்காது கொள்வானிடமும் சேர்தல் காண்க.