சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

174 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘கொள்வோளை இன்னும் கூறின் பெருகும்’ 37  
என்று கூறிய செய்திகளையும்,

பிரயோக விவேக நூலார்,

  ‘அநிராகருத் தாவும் பிரேரகமும்
கொடையெதிர் கூற்றுஅநு மந்தாவும் ஆம் என்பர்கொள்பவனே’
பி.வே.13
என்று கூறியதையும் நோக்குக.
 
 

ஒத்த நூற்பாக்கள்
 

 
  ‘நான்காகுவதே
கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொருளாயினும் கொள்ளும் அதுவே.’
 
தொல்.சொல்.75
  ‘அதற்கு வினை......................என்மனார்.’
‘............................குப்பொருட்டென்பது
மெய்திகழ் வேற்றுமை நான்கா வதாம்மிக்க
கோளியிலே.’
வீ.சோ.34
  ‘ஓதும் குகர வுருபுநான் காவதஃது
யாதிடத்தும் ஈபொருளை ஏற்குமாம்.’
நே.சொல்.19
  முழுதும்
‘குவ்வே நான்கனது உருபா கும்மே.’
‘கொடைபகை சிறப்புக் காதல் தகுதி
அதுவாதல் முறைபொருட்டு அதன்பய னிலையே,
 
நன். 298, தொ.வி.59
மு.வீ.பெ.19

60
 

ஐந்தாம் வேற்றுமை
 

 
202 ஐந்தா வதற்குஉருபு இன்னும் இல்லும்
நீங்கல் ஒப்புஎல்லை ஏதுப் பொருள்வயின்
இதனின்இற்று இதுஎன வரல்அதன் பொருளே.
 
 

இஃது ஐந்தாம் வேற்றுமை உருபும் பொருளும் உணர்த்துகின்றது.