சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

18 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

வண்மைநிலை விதியானது தகுதி அவாய்நிலையைக் காட்டிலும் மிகவும் விரியும் என்க.
தொல்காப்பியர் இம்மூன்றையும் உள்ளடக்கி ‘நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும்
(தொல்.110) என்றார்.” இ.கொ.105 உரை

தொகைநிலை வகையால் தொடர்தலையும் தொகாநிலை வகையால் தொடர்தலையும்
அவாய்நிலை முதலிய மூன்றனோடும் தனித்தனியே கூட்டிக்கொள்க. தொடர்மொழி
தொகைநிலை தொகாநிலை என இரு வகையான் வரும் என்பர் தெய்வச்சிலையார்.
தொல்.சொல். 1

யானைக்கோடு - தொகைநிலை வகை
                    சாத்தன் உணடான் - பயனிலை வகை
                    நிலனும் நீரும் - எண்ணுநிலை வகை

 தொல்.சொல்., 1 உரையா.
 

பொதுமொழியாவது தனிமொழி தொடர்மொழி இரண்டனுள் அடங்குதல் முன்னர்க்
கூறப்பட்டது. (ப-14) 161
 

ஒத்தநூற்பாக்கள்:
 

 ‘ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன.’

ஒருமொழி ஒன்றையும் பலவையும் தொடர்மொழி
பொதுஅவ் விரண்டையும் புகலும் தன்மைய
தொகை தொகா எனஇரு தொடர்மொழி என்ப.

‘ஒருபொருள் பயப்பது ஓருரையாகும்.’
‘பலபொருள் பயப்பது தொடர்சொற்
‘இருமையும் பயப்பது பொதுஎன மொழிப.’

நன். 260



தொ.வி. 45

மு.வீ.பெ. 6
கிளவி.’ 7
8