என்றாற் ஆசிரியர் அகத்தியனாரும் எனக்கொள்க. பண்பின் கிழமை எனினும், ஒன்றியல் கிழமை எனினும் ஒக்கும். அதுதான், சாத்தனது இயற்கை- நிலத்து அகலம்- என்பனபோல வரும் இயற்கைக் கிழமையும், சாத்தனது நிலைமை- சாத்தனது இல்லாமை- என்பனபோல வரும் நிலைக் கிழமையும் என இரு வகைப்படும். |