சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-45185

  உரிமையாய்த் தோன்றல் உரைக்கப் படுமே
வேறாய்த் தோன்றல் வேறிடத் துஞ்செலும்
நிலைமையில் உடைமைகள் பலவும் ஆகும்’

‘குறையை இன்றும் கூறின் பெருகும்’



இ.கொ.40
41
என்று கூறியனவும், பிரயோகவிவேகநூலார்
 
  ‘முற்றிய காரக மாம்கிரியா சட்டி மொய்குழலாய்
பற்றிய பேதம் அபேதம்என் றானசம் பந்தசட்டி
ஒற்றிய காரகம் ஆகாது’
 

17
என்று கூறி அந்நூற்பாவிற்கு எழுதிய உரையையும் நோக்குக.


சூறாவளி
 

  சொல்லின் திரிபே பொருள் என அபேதம் கூறுவார் மதம்பற்றித் தொகையது
விரி- பொருளது கேடு- என்பனவற்றோடு சொல்லது பொருள் என்பதனையும் சிறிது
திரிந்ததற்கு உதாரணமாகக் காட்டினார். மேல் சொல்லாவது இருதிணை ஐம்பால்
பொருளையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசை எனப் பேதமாகக் கூறியதை
மறந்தார் போலும்.
 

அமைதி
 

சொல்லைப் பொருளின் பேதமாகவும், அபேதமாகவும், பேதாபேதமாகவும்
கொள்ளும் மரபு தொல்காப்பியனாருக்கும் உளதாதல்,
 

  ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள’

‘வம்பு நிலையின்மை’
‘நம்பும் மேவும் நசையா கும்மே’

தொல்.சொல்.372
327
329
முதலிய நூற்பாக்களான் விளங்கிக் கிடப்பது காண்க.