சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-45189

தன்னிடத்து நிகழ்வதனைத் தன்கண் நிகழ்வது என்றும் அவ்விடப் பொருள் பற்றி
ஏழம் வேற்றுமை வந்தவாறு கண்டுகொள்க.. எனா என்பது எண் இடைச்சொல்.

‘அன்ன பிறவும்’ என்றதனால், பொருட்கண் உணர்வு- என்கண் அன்புஉடையன்-
மலர்க்கண் நாற்றம்- ஆகாயத்துக் கண் பருந்து- என்னும் தொடக்கத்தன கொள்க.

இனிக் கண் கால் முதலியவற்றை உருபு என்பாரும் உளராலோ எனின், உருபு
ஆயின் ஊர்ப்புறத்து இருந்தான்- ஊர் அகத்து இருந்தான்- கை வலத்து உள்ளது
கொடுக்கும்- எனப் புறம் அகம் வலம் என்பனவற்றுவழி அத்துச் சாரியை கொடுத்து
உதாரணங் காட்டல் பொருந்தாமையானும், அவை வேறு வேறுபட்ட இடப்பொருள்
ஆகிய பெயராய் நிற்றல் அல்லது பெயர்ப் பொருளை ஐ-ஒடு- கு- இன்- அது- போல
வேறுபடுத்தும் தன்மையவாய உருபுகளாய் நிற்றல் இன்மையானும் உருபு ஆகா என்க.
இவற்றைப் பொருள் என்றலே ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் கருத்து என்பது
சேனாவரையர் உரையான் உணர்க. வாய்- வயின்- பாடு அளை- முதலியன
இடப்பொருளவாகிய பெயராய் நிற்றல் அல்லது பெயர்ப்பொருளை வேறுபடுத்தும்
தன்மையவாய் நிற்றலின்மையின் அவையும் ஏழன் உருபு ஆகாமையும், கண்- கால்-
முதலியன போலத் தம்முள் பொருள் வேறுபாடு உடைய அன்மையின் இவ்விடப் பொருள் பற்றிக் கண் என் உருபு வாராமையும் உணர்க. 46
 

விளக்கம்





 
ஏழாம் எண்ணுமுறைமை- 194-ஆம் நூற்பாச்செய்தி.
இடம் என்பது சந்தர்ப்பம் என்னும் பொருளது;
‘ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடம்என மொழிப’




தொல்.பொருள்-513
என்ப ஆதலான்.