சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-46,47193

  ‘ஏழினுக்கே, தானாம் உழைவயின் பக்கல் உழிஇல்
கண் சார்பிறவும்.’ வீ.சோ.
‘கண்ணென்ப தேழாம் உருபாகும் காலநிலம்
நண்ணும் வினையிடத்து நன்கு.’
‘ஏழன் உருபுகண் ஆதி ஆகும்
பொருள்முதல் ஆறும் ஓர்இரு கிழமையின்
இடனாய் நிற்றல் இதன்பொருள் என்ப.’

‘கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலம்இடம் மேல்கீழ் புடைமுதல்
பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி
உள்அகம் புறம்இல் இடப்பொருள் உருபே.’

‘கண்முத லியனஏ ழனதுரு பாகும்.’

‘அதன்பொருள் பொருள்முதல் ஆறிரு கிழமையின்
இடனாய் நிற்பது என்மனார் புலவர்.’
 

35

நே. சொல். 20



நன்.301, தொ.வி. 62



நன். 302

மு.வீ.பெ.65


66
 எட்டாம் வேற்றுமை
 
 
205 எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்புஅயல்
திரிபும் ஆம்பொருள் படர்க்கை யோரைத்
தன்முக மாகத் தான் அழைப் பதுவே.
 
 

இஃது எட்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உணர்த்துகின்றது.

இ-ள்: எட்டாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபு விளி ஏற்கும்
பெயரின் இறுதி திரிதலும், கெடுதலும், பிறிது வந்து அடைதலும், இயல்பு ஆதலும், ஈற்று
அயல் நின்றதன் திரிபும் ஆம்; அதன்