பொருள் படர்க்கை இடத்தாரை ஒருவன் தனக்கு எதிர்முகமாக விளித்தலாம் என்றவாறு. ‘எய்துபெயர்’ எனவே, எய்தாப்பெயரும் உள என்பதாயிற்று. அவை மேற்கூறுப. படர்க்கை இடத்தார் எனவே, ஏனை இடத்தார் ஈண்டே விலக்கப்பட்டார் என்பதூஉம் பெற்றாம். படர்க்கையோரை என்றாரேனும், |
| ‘ஒருபால் கிளவி எனைப்பால் கண்ணும் வருவகை தானே வழக்கு என மொழிப’ |
தொல்.பொருள்-22 |
என்ப ஆதலின் அவ்விடத்து ஐம்பாலும் கொள்க இயல்பாய விளி உருபிற்கும் பெயர் உருபிற்கும் வடிவான் வேற்றுமை இன்றேனும் பொருளான் உளது எனக்கொள்க. தான் என்பது சந்த இன்பப்பொருட்டு வந்தது. 47 |
| விளக்கம் | |
| எட்டாம் எண்ணும் முறைமை - 194 ஆம் நூற்பாச் செய்தி நல்லாள் - நல்லாய் - இறுதிதிரிந்தது. ஊரன் - ஊர - இறுதிகெட்டது மகன் - மகனே - பிறிது வந்து அடைந்தது. அடிகள் - அடிகள் - இயல்பாயது. மக்கள் - மக்காள் - ஈற்றயல் நின்றது. | |
திரிந்தது. விளியின் பொருள் படர்க்கைப் பொருளை முன்னிலைப் படுத்துதலாம்.விளி எய்தாப் பெயர்கள் 216 ஆம் நூற்பாவில் கூறப்படும். படர்க்கையோர் எனப் பலர்பால் மேல்வைத்து ஓதினாலும், படர்க்கையிடத்து ஆண்பால் பெண்பால் பலர்பாலும் ஒன்றன்பால் பலவின்பால் என்ற ஐந்தும் கொள்ளப்படும். |