சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-47195

இயல்பாய விளி உருபிற்கும் பெயர் உருபிற்கும் வரி வடிவில் வேற்றுமை இன்று
எனினும், ஒலிவடிவில் உண்மை அறிக; பொருள் நோக்கியும் உணரலாம்.
 

  ‘அழைத்தல் ஒன்று அன்றி வேறு இன் மையின்
விளிக்குச் சூத்திரம் விளம்பிலம் என்க.’?
என்ற இலக்கணக்கொத்து நூற்பாவும்,



 
  ‘பண்மை ஒருமை விளி
துற்றிய சம்புத்தி சம்போ தனம்எனத் தோன்றிடுமே’(17)

என்ற பிரயோக விவேகநூற்பாப் பகுதியும் உளங்கொள்க.
 
 

    ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப’.

‘அவ்வே
இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப.’

‘ஆய்ஆள்ஈ ஏஅவ்வொடு ஆஆன்ஓல் ஓய்ஈர் அளபெடைகள்
மாயா விளியின் உருபுகள் மற்றவை முன்னிலைக்கண்ணேயாகும்’

‘ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
வேறு வருதலும் மெய்இயல்பும்- கூறும்
இரண்டீற்று மூவகைப்பேர் முன்னிலைக்கண் என்றும்
திரண்டுவிளி ஏற்கும் திறம்.’
முழுதும் நன். 303,
‘விளியெனப் படுப ஏற்கும் பெயரொடு
விளங்கத் தோன்றும் இயற்கைய என்ப.’

‘அதுவே,
விளிகொளும் பெயரும் விளிகொளாப் பெயரும்
எனஇரு திறத்தவாம் என்மனார் புலவர்.’


தொல்.சொல். 118


தொல்.சொல். 119


வீ.சோ. 36



நே.சொல்.24
தொ.வி. 69


மு.வீ.பெ.98


 மு.வீ.பெ.99