இதுமேல் ‘எய்துபெயர்’ என்றார், அவை இவை எனத் தொகுத்து உணர்த்துகின்றது. இ-ள்: இகர உகர ஊகார ஐகார ஓகாரங்களும் னகர ளகர ரகர லகர யகரங்களும் ஆகியபத்து ஈற்று உயர்திணைப்பெயர்களும், இவற்றுள் ஓகாரமும் ரகாரமும் ஆகிய இரண்டனை ஒழித்து நின்ற எட்டுடனே ணகரமும் ஆகாரமும் ஆகிய பத்து ஈற்று விரவுப்பெயர்களும், ஒற்றும் உயிரும் ஆகிய அஃறிணைப்பெயர்களும் விளி ஏற்பனவாம். அங்ஙனம் விளி ஏற்றற்குப் பொருந்தும் இடம் அறிக வழக்கிடத்து என்றவாறு. ‘முன்னிலை யாக்கலும் சொல்வழிப் படுத்தலும்’ (தொல்.பொருள்.101) வேண்டுழி என்பார் ‘ஒல்வழி’ என்றார். இன்னும் அதனானே, உகரம் குற்றுகரம் எனவும் முற்றுகரமும் சிறுபான்மை விளி ஏற்கும் எனவும் கொள்க. ஏனை ஈற்றுப் பெயர்கள் விளி கொள்ளா என்பது தானே போதரும் என்க. 48 |