சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-48197

அஃறிணையீறு- உயிர்ஈறு பன்னிரண்டும், மெய்யீறு ஞணநமண யரல வழள என்ற
பதினொன்றும் ஆகிய இருபத்து மூன்றனுள் ஏற்பன.

இவை விளியேற்கும் ஈறுகளாம்.

படர்க்கையோரை முன்னிலைப்படுத்தி அவருடன் உரையாடும் வாய்ப்பு நிகழும்
இடத்திலேயே விளிவேற்றுமை பயன்படும் என்றார்.

விளியேற்கும் உகரஈறு பெரும்பான்மை குற்றிய லுகர ஈறாகவும் சிறுபான்மை
முற்றியலுகரஈறாகவும் வரும் என்பது முறையே தொல்காப்பியனார், தொல்காப்பிய
உரையாசிரியர்கள் ஆகியோர் கருத்தாகும்.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

    ‘இ உ ஐ ஓ என்னும் இறுதி
அப்பால் நான்கே உயர்திணை மருங்கின்
மெய்ப் பொருள் சுட்டிய விளிகொள் பெயரே.’

‘உகரம் தானே குற்றியலுகரம்.’

‘ஏனை உயிரே உயர்திணை மருங்கின்
தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்.’

‘னரலள என்னும் அந்நான்கு என்ப
புள்ளி இறுதி விளிகொள் பெயரே.’

‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா.’

‘கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை’.

‘புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉம் காலம் தோன்றின்
தெளிநிலை உடைய ஏகாரம் வரலே.’

‘விரவுப்பேர் எல்லாம் விளிக்குங்கால் முன்னை
மரபிற்றாம்; அஃறிணைப்பேர் வந்தால்- மரபின்
கொளவரும் ஏகாரமும்’



தொல்.சொல். 120
123


124


128

129


150




151