சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-49199

வரலாறு: நம்பிவாழி- வேந்துவாழி- திருவாழி- ஆடூஉவாழி- நங்கைவாழி-
கோவாழி- என உயிர்ஈற்று உயர்திணைப் பெயர்கள் அண்மைக்கண் இயல்பு ஆயின.
கணி கணியே- வேந்து வேந்தே- திரு திருவே- ஆடூஉ ஆடூஉவே- கோ கோவே- என
உயிர்ஈற்று உயர்திணைப் பெயர்கள் பிறிதுவந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன.

நம்பி நம்பீ- தோழி தோழீ- என இகரஈற்று உயர்திணைப் பெயர்கள் ஈகாரம்
ஆகித் திரிந்தன.

  னகர ஈற்று உயர்திணைப் பெயருள்,
‘நம்பன் சிறிதே இடைதந்து இது கேட்க’
சீவக. 1975
என அன்ஈறும், சேரமான் மலையமான்- என ஆன்ஈறும் அண்மைக்கண் இயல்பு
ஆயின.
 

 

‘படிவ உண்டிப் பார்ப்பன மகனே’ குறுந்.
 
156
    என முறைமை சுட்டா மகனும்,
 
  ‘தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு’
 
 

என அன்ஈறும், தம்முன் தம்முனே என உன் ஈறும் பிறிது வந்து அடைதலாய்
ஏகாரம் மிக்கன.

கடவுள் வாழி, அடிகள் கூறீர், கோமாள் கூறாய், கடியாள் கூறாய்,
 

  ‘ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்..............
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்’
 
புறம்-9
என ளகர ஈற்று உயர்திணைப்பெயர்கள் அண்மைக்கண் இயல்பு ஆயின.
 
  ‘அகவன் மகளே அகவன் மகளே’
குறுந்.23
 

என முறைமை சுட்டா மகள் என்னும் ளகர ஈற்று உயர்திணைப்பெயர் பிறிது வந்து
அடைதலாய் ஏகாரம் மிக்கது,