சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

200 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘மாந்தர் கூறீர், சான்றோர் கூறீர், கேளிர் வாழி,
‘பெண்டிரும் பிணியுடையீரும்..........நும் அரண் சேர்மின்’
 
புறம்.9
என ரகர ஈற்று உயர்திணைப்பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின.

இளையவர் இளையவரே, வந்தவர் வந்தவரே, கரியவர் கரியவரே என ரகார ஈற்று
உயர்திணைப்பெயர்கள் ஆண்மைக்கண் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன.

குரிசில் கூறாய், தோன்றல் கூறாய், ஆண்பால் கூறாய், பெண்பால் கூறாய் என
லகர ஈற்று உயர்திணைப்பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின.
 

 

‘திருமாலே தோன்றலே’
‘குரிசிலே எம்மை உள்ளாய்’
 
(பெருமாள்.49)
என லகர ஈற்று உயர்திணைப்பெயர்கள் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம்
மிக்கன.

ஆய்வாழி என யகர ஈற்று உயர்திணைப்பெயர் அண்மைக்கண் இயல்பு ஆயிற்று,
ஆயே கூறாய் என யகர ஈற்று உயர்திணைப்பெயர் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம்
மிக்கது.

பிண வாராய், சாத்தி கூறாய், பூண்டு கூறாய், அழிது வாராய், தந்தை தாராய்,
அன்னை அருளாய் என உயிர் ஈற்று விரவுப் பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின.

பிணாவே, கூறாய், பூண்டே கூறாய் என உயிர் ஈற்று விரவுப் பெயர்கள் பிறிது
வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன.

சாத்தி சாத்தீ, எம்பி எம்பீ என இகர ஈற்று விரவுப் பெயர்கள் ஈகாரமாய்த்
திரிந்தன.