சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

204 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பண்புத்தொகையும் வினைத்தொகையும் ஒருசொல் நீர்மைய ஆதலின் அவற்றை
ஒரு சொல்லாகக்கொண்டு, அவற்றான் ஆகும் அன்மொழித்தொகையை ஆகுபெயர்
என்று கொள்ளும் கருத்தினராகிய இவ்வாசிரியர் தாழ்குழல் என்பதனை ஆகுபெயர்
என்றார். சேனாவரையர் மதம் எனினும் ஆம்.

தொழுத்தை என்ற சொல் தொழீஇ என்ற திரிசொல்லாய வழித் தொழீஇ இ
என்றாற்போல விளிக்கண் அளபெடுக்கும் அதன் அளபெடை இகரம் ஈகாரம் ஆகாது
என்பது. அளபெடைப் பெயர்கள் அளபெடை மிக்கு விளியேற்கும். பொதுவாக
அளபெடைப் பெயர்கள் இறுதி திரியாது அளபெடை மிக்கு விளியேற்றலை, ஈண்டு
‘இயல்பாய் விளியேற்றன’ என்றார். தொல்காப்பியனாரும், இக்கருத்தை,
 

  ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
இயற்கைய வாகும் செயற்கைய என்ப’
 

தொல்.சொல்.125

முதலிய நூற்பாக்களான் விளக்கினார்.

அம்ம என்ற இடைச்சொல் விளியேற்குங்கால் அம்மா என நீண்டது, மாஅல்
முதலியவற்றை இயற்கைச் சேறல் என்றும், மரல் முதலியன விகாரம் என்றும்
கொள்ளலாம் என்றனர் சேனாவரையர் முதலாயினாரும்:
 

  நம்பி-வேந்து-நங்கை என இயல்பாய் விளியேற்றல்
‘அண்மைச் சொல்லே இயற்கை யாகும்’
 

தொல்-சொல்.127

என்பதனால் கொள்ளப்படும்.
 
  நம்பி- நம்பீ- ‘இஈ ஆகும்’
கோ- கோவே; வேந்து- வேந்தே; திரு- திருவே-
‘ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.’
‘உகரம் தானே குற்றிய லுகரம்.’
கணி- கணியே; ஆடூஉ- ஆடூஉவே முதலியன.