சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-49205

  ‘ஏனை உயிரே உயர்திணை மருங்கின்
தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்’

124

என்ற நூற்பாவில் வேண்டா கூறி வேண்டியது முடித்தலான் கொள்ளப்பட்டன.

நம்பன், பார்ப்பன மகனே, தென்னவனே, மன்னவனே தம்முனே என்பன.
 

  ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’

129

என்ற நூற்பாவில் வேண்டா கூறி வேண்டியது முடித்தலான் கொள்ளப்பட்டன.
 
  சேரமான் மலையமான் என்ற இயல்புவிளி
‘ஆன்என் இறுதி இயற்கை யாகும்’

132

என்பதனால் கொள்ளப்படும்.
 
  கடவுள், அடிகள், பார்ப்பன மாக்கள்,- இயல்பாயினமை
‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’

129

என்பதனால் கொள்ளப்பட்டது.
 
  கோமாள் கடியாள் என்பன இயல்பாயினமை
‘அயல்நெடி தாயின் இயற்கை யாகும்’

142

என்பதனால் கொள்ளப்பட்டது.
 
  அகவன், மகளே, மாந்தர், கேளிர், பெண்டிர் என்பன
‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’

129

என்பதனால் கெள்ளப்பட்டன.

இளையவரே வந்தவரே கரியவரே என்பன
  ‘தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும்
‘வழுக்கின்று என்மனார் வயங்கி யோரே’
 

139
 

  ‘பண்புகொள் பெயரும் அதனோர ற்றே’

140


என்பனவற்றால் கொள்ளப்பட்டன.