சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-49207

  தூங்கல் முதலியன
‘கிளந்த இறுதி .... .... .... காலை”

150

என்பதனாலும்,
 
  நெஞ்சம், குருகு என்ற இயல்பு விளி
‘புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉம் காலம் தோன்றின்
தெளிநிலை உடைய ஏகாரம் வரலே’
 

151
 

என்ற நூற்பாவின் ‘தெளிநிலை உடைய’ என்ற மிகையானும்,

இதண்- இதணே முதலாக ஏகாரம் பெற்று அஃறிணைச் சொற்கள் விளியேற்குமாறு

‘புள்ளியும் உயிரும்’ என்ற அதே நூற்பாவானும் கொள்ளப்பட்டன.
 

  சுடர்த்தொடீஇ- ‘இ ஈயாகும்’
 

தொல்.சொல். 121
 

  தாழ்குழலே- ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’

129

என்பவற்றால் கொள்ளப்பட்டன.

தொழீஇ-தொழீஇஇ என அளபெடுத்துப் பின் இஈ யாகாது இயல்பாதலும்,
உழாஅன் கிழாஅன் என்பன உழாஅஅன், கிழாஅஅன் என அளபெடுத்து
இயல்பாதலும், சிறாஅர், மகாஅர், மாஅல், என்ற பெயர்கள் அளபெடுத்து இயற்கையாய்
விளியேற்றலும்.
 

  ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
இயற்கைய ஆகும் செயற்கைய என்ப’

125

  ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’

135

  ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’

149

  ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’

151

என்ற நூற்பாக்களால் கொள்ளப்படும்.

இவற்றுள் அளபெடாது வரும் உழான், கிழான், கோன், சிறார், மகார், மால்
என்பன அளபெடாது நிற்றல் செய்யுளின் சந்த இன்பம் நோக்கி விகாரப்பட்டு
வந்ததாகக் கொள்ளப்படும்.