என்பதனாலும் கொள்ளப்படும். இந்நூற்பா உரையில் காணப்படும் எடுத்துக்காட்டுகளுள் பெரும்பாலான நச்சினார்க்கினியர் தொல்காப்பிய விளிமரபு நூற்பாக்களுக்குத் தந்த எடுத்துக்காட்டுக்களை உடன் கொண்டே தரப்பட்டுள்ளன. ஆண் பெண் முதலிய ணகரஈற்றுச் சொற்கள் விளி ஏற்றலைத் தொல்காப்பியனார் கூறாராகவே, அவை போன்ற சிலவே இவ்வாசிரியர் இந்நூலுள் புதியனவாகக் கொண்டனவாம். |