| ‘ஆள்என் இறுதிப் பண்புப் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் ஆயொடு விளிக்கும்.’ | 127 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’ | 130 |
|
ரகர ஈற்றுச் சிறப்புவிதி |
211. | ர-ஈற்று உயர்பெயர்க்கு அளபுஎழல் ஈற்றுஅயல் அகரம் இஈ ஆதல் ஆண்டைஆ ஈஆதல் அதனோடு ஏ-உறல் ஈற்று ஏ மிக்கு அயல் யா-கெட்டு அதன்அயல் நீடல் ஈற்றின் ஓஉறல் இவையும் ஈண்டு உருபே. | |
இது ரகர ஈற்று உயர்திணைப்பெயர்கட்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுகின்றது. இ-ள்: ரகர ஈற்று உயர்திணைப்பெயருள் சில, உறாஅர் - செறார் செறாஅர்- எனச் சேய்மைக்கண் அளபு எடுத்தலும், சில, |
| தெவ்வர் ‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்’ | குறள். 771 |
என ஈற்றுஅயல் அகரம் இகரம் ஆதலும், சில வேந்தர் வேந்தீர் - நாய்கர் நாய்கீர் என அஃது ஈகாரம் ஆதலும், சில பார்ப்பார் பார்ப்பீர் - சான்றார் சான்றீர் - கரியார் - கரியீர்- என ஈற்று அயல் ஆகாரம் ஈகாரம் ஆதலும் |
| சில, பல்சான்றார் ‘பல்சான்றீரே’ | புறம்.195 |
| சீவக சாமியார் ‘சீவக சாமியீரே’ | சீவக.193 |
என அதனுடனே ஏகாரம் மிகுதலும், சில, தோழியார் தோழீரே, தொழும்பியார் தொழும்பீரே என் ஈற்று அயல் யா-கெட்டு அதன் அயல் இகரம் ஈகாரமாய் ஏகாரம் மிகுதலும், |