சில, பெண்டிர் பெண்டிரோ என இர்ஈறு புலம்பின்கண் ஓகாரம் மிகுதலும் ஆகிய இவையும் விளி உருபாம் என்றவாறு. ‘ஈண்டு’ என்ற மிகையானே, கடல்-கழி- சாத்தி- கொற்றி என்றல் தொடக்கத்து ஒரு சாரனவற்றைக் கடலார்- கழியார்- சாத்தியார்- கொற்றியார்- எனச் சிறப்பித்து உயர்திணை வாய்பாட்டான் வழங்குழி, அவையும் கடலீரே- கழியீரே- சாத்திரே- கொற்றீரே என்றல் தொடக்கத்துத் திரிபு ஏற்றலும், பிறவாற்றான் வரும் திரிபு வேறுபாடுகளும் கொள்க. |
எய்தியது- 207ஆம் நூற்பாச் செய்தி. ரகர ஈறு எனவே அர் ஈறும் ஆர் ஈறும் இர் ஈறும் அடங்கின. தெவ்வர், வேந்தர், நாய்கர் என்பன அர் ஈற்றுப் பெயர்கள். உறார், செறார், பார்ப்பார், சான்றார், கரியார். பல் சான்றார், சீவக சாமியார், தோழியார், தொழும்பியார் என்பன ஆர் ஈற்றுப் பெயர்கள். பெண்டிர் என்பது இர் ஈற்றுப் பெயர். சீவக சாமியார், சீவகசாமியீரே என்று விளியேற்றலைப் |