சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

220 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.’

140

  ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’

141

  ‘ஈர் ஆகும் அர் ஆர் இதன் மேலும் ஏகாரம்
ஓரோ விடத்துளதாம் ஓங்களபாம்- பேர்கள்
இயல்பாம்.’

நே.சொல்.27

  முழுதும்

நன்.309, தொ.வி.74

  ‘ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.

மு.வீ.பெ.119

  ‘தொழிற் பெயர்க்கிளவி ஏயொடு சிவணும்.’

120

  ‘பண்புகொள் பெயரும் அவ்வியல்பு ஆகும்.’

121

  ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’

122


லகர யகர ஈற்றுச் சிறப்புவிதி
 

212. லகார ஈற்று ‘உயர்பெயர்க்கு அயல்நீ டுதலும்
யகார ஈற்றிற்கு அளபும் ஆகும்.
 
 

இது லகர யகர ஈற்று உயர்திணைப் பெயர்கட்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது.

இ-ள்: லகர யகர ஈற்று உயர்திணைப் பெயர்களும் சில முறையானே ஏந்தல் ஏந்தால்- தோன்றல் தோன்றால்- குரிசில் குரிசீல்- என லகர ஈறு ஈற்று அயல் நீடலும்,
 

  விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்நாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்துஈ னும்மோ

 புறம்- 130

என யகரஈறு சேய்மைக்கண் அளபு எடுத்தலும் விளி உருபாம் என்றவாறு. பிறவும்
அன்ன.
 


விளக்கம்
 

எய்தியது- 207 ஆம் நூற்பாவிதி.
                    யகர ஈறு இயல்பாதலை நச்சினார்க்கினியர்,
 

 

ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா.

தொல்.சொல்.131

என்ற நூற்பா உரையில் குறிப்பிட்டார். சேனாவரையரும் தம் 129 ஆம் நூற்பா உரையில் குறிப்பிட்டுள்ளார்.