சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

222 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இகலா, அலவா, கலுழா, சாத்தா, கொற்றா- என்பன இறுதி அழிவதனொடு ஈற்றயல் நீண்டன.
 

  ‘அன்என் இறுதி ஆவா கும்மே’

தொல்.சொல். 130

  ‘அண்மைச் சொல்லிற்கு அகரம் ஆகும்.’

தொல்.சொல். 131

என்று தொல்காப்பியனார் உயர்திணைக்கு ஓதியதை வழக்குப் பயிற்சி நோக்கி இவர்
ஏனையவற்றிற்கும் கொண்டார்.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘அன்இறுதி ஆஆகும் அண்மைக்கு அகரமாம்.’

நே.சொல்.26

  முழுதும்

நன். 311, தொ.வி.76


லளஈற்று அஃறிணைப்பெயர் பொதுப்பெயர் விளியேற்றல்
 

214. லள ஈற்ற அஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண்
ஈற்று அயல் நீட்சியும் உருபுஆ கும்மே.
 

இது லகர ளகர ஈற்று அஃறிணைப் பெயர்க்கும் விரவுப் பெயர்க்கும் எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது.

இ-ள்: லகர ளகர ஈற்று அஃறிணைப் பெயருள்ளும் விரவுப் பெயருள்ளும், சில
 

  முயல்- ‘திங்களுள் தோன்றி இருந்த குறுமுயால்’

 கலி. 144

கிளிகள் கிளிகாள் எனவும், கூந்தல் கூந்தால், மக்கள் மக்காள் எனவும், ஈற்று அயல் நீடலும் விளி உருபும் என்றவாறு. 56
பிறவும் அன்ன.
 

விளக்கம்
 

எய்தியது- 212 ஆம்நூற்பாச்செய்தி. தொல்காப்பியச் சொற்படல விரவுப்பெயர் (150) அஃறிணைப்பெயர் (151) நூற்பாக்களில் சேனாவரையர் உரையில் கூந்தால்,
மக்காள், முயால் என்பன கொள்ளப்பட்டன.