சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-58,59227

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘தான்என் பெயரும் சுட்டுமுதல் பெயரும்
யான்என் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி அனைத்தும் விளிகோள் இலவே.’

தொல்.சொல்.137

  ‘சுட்டுமுதல் பெயரே முற்கிளந் தன்ன.’

142

  ‘நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று
அம்முறை இரண்டும் அவற்றியல்பு இயலும்.’

143

  ‘சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.’

148

  ‘தநநு எஎன அவைமுத லாகிய
தன்மை குறித்த ளரளஎன் இறுதியும்
அன்ன பிறவும் பெயர்நிலை வரினே
இன்மை வேண்டும் விளியொடு கொளலே.’

154

  ‘விளியேலா எவ்வீற்றுப் பெயரும்..... .... போற்று.’

நே.சொல். 57

  ‘நுவ்வொடு வினாச்சுட் டுற்ற னளர
வைது தாம்தான் இன்னன விளியா.’

 நன். 314

  ‘யான்அவன் இவன்உவன் விளிஏ லாவே.’

மு.வீ.பெ 117

  ‘யாவனும் அவ்வியல் பிற்றா கும்மே.’

118

  ‘அவர் இவர் உவர்விளி அடையா ஆகும்.’

123

  ‘யாவரும் நீயிரும் அவற்றோ ரற்றே.’

124

  ‘யாவள் அவள் இவள் உவள்விளி யாவே.’

129

  ‘தமர்நுமர் தமன்நுமன் தமள்நு மள்விளி
ஏலா நமர் நமள் என்பதும் அற்றே.’

135


இருவகை மயக்கம்
 

217. பொருள் மயங் குதலும் உருபுமயங் குதலும்
தெரிநிலை உடைய வேற்றுமைக் கண்ணே.
 

இது மேற்கூறிப் போந்த வேற்றுமைகட்கு எய்தாதது எய்துவிக்கின்றது.