சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

232 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘சினைநிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்
வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர்’

85

என்ற நூற்பாவால் கோட்டைக்குறைத்தான் என்ற இரண்டாவதன் பொருட்கண்
கோட்டின்கண் குறைத்தான் என்ற ஏழாவது ஒத்த உரிமையோடு மயங்குதலும்,
 
  ‘கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே’

86

என்ற நூற்பாவால் சூதினைக்கன்றினான்- நெறியைச் சென்றான்- என்ற இரண்டாவதன்
பொருட்கண் சூதின்கண் கன்றினான்- நெறிக்கண் சென்றான்- என ஏழாவது ஒத்த
உரிமையோடு மயங்குதலும்.
 
  ‘மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
நோக்கோ ரனைப என்மனார் புலவர்’

92

என்ற நூற்பாவால் வாணிகத்தான் ஆயினான் என்ற மூன்றாவதன் ஏதுப் பொருட்கண்
வாணிகத்தின் ஆயினான் என்ற ஐந்தாவது மயங்குதலும்,
 
  ‘இரண்டன் மருங்கின் நோக்குஅல் நோக்கம்அவ்
விரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும்’

93

என்ற நூற்பாவால் வானை நோக்கி வாழும் என்ற இரண்டாவதன் பொருட்கண் வானான் நோக்கி வாழும்- வானின் நோக்கி வாழும் - என்ற மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்குதலும்,
 
  தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடிநிலை யிலவே பொருள்வ யினான

95

என்ற நூற்பாவால் ‘புலி கொன்ற யானை’ என்ற தொடர் புலியைக் கொன்ற யானை-
புலியாற் கொல்லப்பட்ட யானை என இரண்டாவதனொடும் மூன்றாவதனொடும்
மயங்குதலும்.