சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-62233

  ‘ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணரு மோரே’

96

என்ற நூற்பாவால் புலி கொல் யானை முதலிய தொடர்ப் பொருள்களின் ஐயம்
அறுத்தலும்,
 
  ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும்
தாம்பிரி விலவே தொகைவரு காலை’

97

என்ற நூற்பாவால், ‘புலி போற்றி வா’ என்ற தொடர் புலியைப் போற்றிவா- புலியால்
போற்றி வா- என இரண்டாவதனொடும் மூன்றாவதனொடும் மயங்குதலும்
 
  ‘ஆறன்மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழும் ஆகும் உறைநிலத் தான’

98

என்ற நூற்பாவால், ‘காட்டியானை’ என்ற தொடர் காட்டது யானை- காட்டின்கண்யானை- என ஆறாவதனொடும் ஏழாவதனொடும் மயங்கலும்,
 
  ‘குத்தொக வரூஉம் கொடையெதிர் கிளவி
அப்பொருள் ஆறற்கு உரித்து மாகும்’

99

என்ற நூற்பாவால் ‘நாகர்பலி’ என்ற தொடர் நாகர்க்குப் பலி- நாகரதுபலி- என நான்காவதனொடும் ஆறாவதனொடும் மயங்கலும்,
 
  ‘அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்
எச்சம் இலவே பொருள்வயி னான.’

100

என்ற நூற்பாவால் ‘பழி அஞ்சம்’ என்ற தொடர் பழியை அஞ்சும்- பழியின் அஞ்சும்
என இரண்டாவதனொடு ஐந்தாவது மயங்குதலும்,