சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

246 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இந்நூற்பாவிற்கு இவ்வாசிரியர் உரைத்ததே சான்றோர் கருத்தொடு பட்ட
உரையாம் என்க. இவ்வுரையே தொல்காப்பிய உரையாசிரியர் பலருக்கும் உடன்பாடு
ஆதலும் தெளிக. முத்துவீரியநூலார் சிவஞானமுனிவரை ஒட்டிஉரை வரைந்துள்ளார்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘முதலும் சினையும் பொருள்வேறு படாஅ
நுலலுங் காலை சொற்குறிப் பினவே.’

தொல்.சொல்.89

  ‘பிண்டப் பெயரும் ஆயியல் திரியா
பண்டியல் மருங்கின் மரீஇய மரபே.’

90

  முழுதும்

நன். 316, மு.வீ.பெ.72


சில உருபு திரிதல்
 

223 ஐஆன்கு- செய்யுட்கு அவ்வும் ஆகும்
ஆகா அஃறிணைக்கு ஆன்அல் லாதன.
 

இஃது அவ்வேற்றுமை உருபுகளுள் சில உருபுகள் செய்யுளுள் திரியவும் பெறும் என்கின்றது.

இ-ள்: ஐயும் ஆனும் குவ்வும் ஆகிய மூன்று உருபும் செய்யுளிடத்து அகரமாய்த்
திரிந்து நிற்கவும் பெறும்; அஃறிணை இடத்தாயின் ஆன் உருபு அன்றி ஐயும் குவ்வும்
திரியா என்றவாறு.

‘ஆகா அஃறிணைக்கு ஆன் அல்லாதன’ எனவே, மூன்றும் உயர்திணைக்கண்
ஆம் என்பது தானே போதரும் என்க. ‘அஆகும்’ எனப் பொதுப்படக்கூறிய
அதனானே,

ஐகாரம் அகரமாய்த் திரிதலும், ஆன் அகரம் பெறுதலும், குவ்வீறு அகரமாய்த்
திரிதலும் ஆம் எனக் கொள்க.

வரலாறு: காவலோனை என்பது