| ‘காவ லோனக் களிறுஅஞ் சும்மே’ எனவும், புலவரான் என்பது ‘புரைதீர் கேள்விப் புலவ ரான’ எனவும், ஆசிரியர்க்கு என்பது ‘கடிநிலை இன்றே ஆசிரி யார்க்க’ | தொல்.389 |
எனவும் அஃறிணைக்கண் புள்ளினான் என்பது ‘புள்ளினான’ எனவும் வரும். உம்மை எதிர்மறை ஆதலின் இவ்வாறு திரிதல் சிறுபான்மை எனக்கொள்க. 65 |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘குஐ ன் என வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும் செய்யு ளுள்ளே.’ | தொல்.சொல். 109 |
| ‘அ-எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின் குவ்வும் ஐயும் இல்என மொழிப.’ | 110 |
| முழுதும் | நன்.318, தொ.வி. 64 |
|
| ‘கு ஆன் என வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும் யாப்பின் மருங்கே. | மு.வீ.பெ.86 |
| ‘அஃறிணை மருங்கின் ஆன்அ- ஆகும்’ | மு.வீ.பெ.87 |
உருபேற்ற சொல்லின் முடிபு
|
224 | எல்லை இன்னும் அதுவும் பெயர்கொளும் அல்ல வினைகொளும் நான்குஏழ் இருமையும் புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர். | |
இஃது உருபு ஏற்றசொற்கு முடிபு கூறுகின்றது. இ-ள்: எல்லைப் பொருண்மைக்கண் வரும் இன்உருபும் அது என் உருபும் பெயரைக் கொண்டு முடியும்; இவை அல்லவாகிய உருபுகள் முற்றும் எச்சமும் ஆகிய வினையைக் கொண்டு முடியும்; அவற்றுள் நான்கன் உருபும் ஏழன் உருபும் |