‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ யாதலின், அவை விசேடித்து நிற்பனஅன்றி வேறொன்றான் விசேடிக்கப்படுவன அல்ல; ஆதலின் ஈண்டு உருபுகளைக்கொள்ளாது உருபு ஏற்ற பெயர்களையே கோடல் வேண்டும். எழுவாய் வேற்றுமைக்கு முடிக்குஞ் சொல் ‘வினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே’ (இ.வி. 197) என்புழிக் கூறப்பட்டது. எட்டாவது படர்க்கையோரை முன்னிலைப்படுத்தும் பெயரும் பெயரது விகாரமும் ஆதலின், அது பெயர் வேற்றுமையை ஒத்துப் பயனிலை கொள்ளுமாறு உய்த்துணரப்பட்டது ஆதலின், ஏனைய இரண்டு முதல் ஏழு ஈறாகிய வேற்றுமைகளுக்கு ஈண்டு முடிபு கூறப்பட்டது. சாத்தனது என்ற குறிப்பு முற்று, படுத்தல் ஓசையால் வினையாலணையும் பெயராகி, வந்தது- நன்று- என்ற பயனிலைகளுக்கு எழுவாய் ஆயிற்று. |