சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-4-525




 
உயிருள்ளளவும் உயிரில் லனவும்
செயிரில் அஃறிணையாம் சென்று.’

‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை.’

திணை இரண் டெனமக்கள் தேவர் நரகர்
ஆவர் உயர்திணை அஃறிணை பிறவே.


நே.சொல்.3

நன். 261
மு.வீ.பெ.9

தொ.வி. 50
 

ஐம்பால் (163, 164)
 

163ஆண்பெண் பலர்என முப்பாற்று உயர்திணை
 

இது மேல் ஐம்பால் என்றவற்றுள் உயர்திணை இத்துணைப்பால் உடைத்து
என்கின்றது.

இ-ள்: ஆண்பாலும் பெண்பாலும் பலர்பாலும் என்னும் இம் மூன்றுபாலையும்
உடைத்து உயர்திணை என்றவாறு.

அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமையின் ஆண்பால் முற்
கூறப்பட்டது. ஆண்பன்மையும் பெண்பன்மையும் இவ்விருபாலும் தொக்க பன்மையும்
அன்றிப் பன்மை என வேறு இன்மையின் பலர்பால் பிற் கூறப்பட்டது. இம் மூவகைப்
பன்மையும், வந்தார் சென்றார் என்னும் ஓர் ஈற்று வாய்பாடே கொண்டு முடிதலின்,
பலர்பால் என ஒன்றாய் அடங்கின. 5
 

விளக்கம்
 

மேல் என்றது 160 ஆம் நூற்பாவினை.
                    பண்டையார் ‘பெருமையும் உரனும் ஆடூஉமேன’

(தொல்.பொருள்.98) எனவும் ‘வழிபடு கிழமை அவட்கு இய லான.’ -160 எனவும் கூறியதோடு அமையாமல்,