சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

26 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பெண்ணைப் ‘பிறன் பொருளாள்’ (குறள்-141) என்றும் கூறியமைகொண்டும்
ஆண்மகனைப் பிறள்பொருளான் என்று கூறாமை கொண்டு ஆண்பாற்கு உயர்வு
கூறியமை கொண்டு ஆண்பாற்கு உயர்வு கொடுத்தல் கருதி ஆண் மகன் சிறந்தமையின்
ஆண்பால் முற்கூறப்பட்டது என்றார். ஆண்பன்மை, பெண்பன்மை ஆண் பெண்
இரண்டன் பன்மை மூன்றற்கும் வினைஒன்றே ஆதலின் பலர்பாலினுள் பகுப்பு மூன்று
இருப்பினும் வினைவேறுபாடின்மையை உட்கொண்டு அதனை ஒரே பகுப்பாக்கினார்.
பன்மை ஆண்பெண் என்ற இருபாலும் பற்றி வருதலின் ஆண்பெண் இரண்டற்கும் பிற
கூறப்பட்டது.
 

சூறாவளி
 

ஆண்பால் பெண்பால் என்னும் வழக்கு உயர்திணைக்கே அன்றி அஃறிணைக்கு
இன்று என்றார். ‘ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய, பெண்பால் எல்லாம் பெண்
எனற்கு உரிய’ (தொல். பொருள். 605) என்னும் மரபியல் சூத்திரங்களையும், ஆண்மை
சுட்டிய பெயர் பெண்மை சுட்டிய பெயர் என்னும் குறியீடுகளையும், களிறு பிடி முதலிய
வழக்குக்களையும் மறந்தார்போலும்.
 

அமைதி
 

அஃறிணைக்கு இன்று என்பது வினையை உட்கொண்டு சொற்றதேயாம். அஃறிணை
வினைக்கண் ஆண் பெண் பாகுபாடு இன்மை வெளிப்படை. அஃறிணைப்பெயர்க்கண்
உள்ள ஆண் பெண்பாகுபாடு சிற்றறிவினார்க்கும் புலனாவதொன்று. ஆசிரியர் கருத்தை
உளங்கொள்ள மனம் இன்றி இங்ஙனம் மறுக்க முற்பட்டமை அழகிதன்று.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

‘ஆடூ அறிசொல் மகடூ அறிசொல்
                     பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி