| அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே’ ‘ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல என்று மருவியபால் ஐந்தும் வகுப்பின்-பொருவிலா ஓங்கு திணைப்பால் ஒருமூன் றொழிந்தவை பாங்கில் அஃறிணைப்பா லாம்’ முழுதும் பால்ஐந்து ஆண்பெண் பலர்உயர் திணையே | தொல்.சொல். 2 நே. சொல். 4 நன். 262 மு.வீ.பெ. 10 தொ.வி. 50 |
164 | ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை. | |
இஃது அஃறிணை இத்துணைப்பால் உடைத்து என்கின்றது. இ-ள்: ஒருமைப்பாலும் பன்மைபாலும் என்று இரு பகுதியை உடைத்து அஃறிணை என்றவாறு ஆண் பெண் என்பன அஃறிணைக்கும் உளவேனும் அவ்விரண்டற்கும் வந்தது என்பது அல்லது வழக்கினுள் வேறு வாய்பாடு இன்மையின், ஆண்பால் பெண்பால் என்னும் வழக்கு உயர்திணைக்கே அன்றி அஃறிணைக்கு இன்று. 6 |
விளக்கம் |
வினைமுற்றில் ஆண்பெண் பாகுபாடு இன்மை குறித்து இவ்விளக்கம் தரப் பட்டது. |
ஒத்த நூற்பாக்கள்: |
| ‘ஒன்றறி சொல்லே பலஅறி சொல்என்று, ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே.’ முழுதும் ‘அன்றியும் ஒன்றுபல அஃறிணை என்ப’ | தொல்.சொல்.3 நன்-263, மு.வீ.பெ.11 தொ.வி. 50 |
ஐயமறுத்தல் |
165 | தெய்வமும் பேடும்ஆம் அவ்விரு பகுதியும் இவ்என அறியும் அந் தம்தமக்கு இலவே உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும். | |