| என்ற நூற்பா உரையுள் சேனாவரையர் உரைத்த செய்தியானும் உணரலாம். இந்நூற்பா உரை சேனாவரையர் உரையைப் பெரும்பாலும் ஒட்டி எழுந்தது. மட்குடம்- மண்ணான் இயன்ற குடம்; மட்குடம் என்ற தொகையை விரிப்புழி, ஆன்என்ற உருபும் இயன்ற என்ற பொருளும் (முடிக்குஞ்சொல்) மறைந்து நின்றன விரிக்கப்படும். இங்ஙனம் அமைந்த தொகைகளை உருபும் பொருளும் உடன் தொக்க தொகை என்றும், உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றும் கூறுப. முடிக்குஞ் சொல்லைப் பொருள் எனவும் பயன் எனவும் கூறுவதன் காரணம், தொடர் மொழிப் பொருளும், தொடரின் பயனும் அதன் கண்ணவாகலான். இனி வடநூலார் இவற்றை இடைப் பதங்கள் தொக்க தொகை என்னும் பொருள்பட ‘மத்திய பதலோபன்’ என்ப. இந்நூற்பா தொல்காப்பியச் சொற்படல 83-ஆம் நூற்பா. இதற்கு நச்சினார்க்கினியர்சேனாவரையர் உரைத்தவாறே இவர் உரை கூறினார். |