காண்க. அன்மை இன்மை முதலிய பற்றிய செய்திகள் யாவும் ‘அன்மையின் இன்மையின்’ (தொல்.சொல்.216) என்னும் நூற்பா உரையில் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. |
ஒத்த நூற்பாக்கள்: |
| ‘குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே.’ | தொல்.சொல். 201 |
|
| ‘அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானும் என்று அப்பால் காலம் குறிப்பொடு தோன்றும்.’ | 213 |
|
| ‘அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் குறிப்பே காலம்.’ | 214 |
|
| ‘நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன் கடியன் மகத்தன் கரியன்-தொடியன் என ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின் நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு.’ | நே.சொல். 47 |
|
| ‘கரிதுஅரிது தீது கடிது நெடிது பெரிது உடைத்து வெய்து பிறிது-பரிது என்ப ஆயிழாய் பன்மையினும் செல்ல அஃறிணையின் மேய வினைக்குறிப்பாம் மிக்கு.’ | நே.சொல். 49 |
|
| ‘பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே.’ | நன். 321 |
|
| ‘தொடர்வினைக் குணமே தொகுக்குங் காலை முதல்நிலைத் தனிவினைப் பகுதி முன்னர்ப் பகுதிமுதல் ஐந்தனுள் வேண்டுவ பொருந்தியும் | |