சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

286 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இனிப் பகரஈறு உண்ப- உரிஞுப- என உகரம் பெறாதும் பெற்றும், மார்ஈறு,
 

  ‘எள்ளுமார் வந்தாரே ஈங்கு’

கலி.81

என உகரம் பெற்றும்,
 
  ‘ஆர்த்தார் கொண்மார் வந்தார்’
எனப் பெறாதும் வரும்.
பிறவும் அன்ன.
 
 
உண்டிலன், உண்ணா நின்றலின், உண்ணலன் முதலிய இவற்றின் மறைவாய்ப்பாடும் அறிக.

இனி, வினையொடு முடியும் என்ற மார்ஈற்றுச் சொல்

‘பீடின்று பெருகிய திருவின்
பாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே’                  புறம். 37

 

 
  ‘காமம் படர்அட வருந்திய
நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே’

நன். 64


எனப் பெயரொடு முடிந்ததால் எனின், இவை பாடுக- காண்க- என்னும்
வியங்கோட்கு எதிர்மறையாய்ப் பாடாது ஒழிக- காணாதுஒழிக- என ஏவற் பொருளாய்
நின்றன; மார் ஈறு அல்ல என்க. அல்லதூஉம், பாடுவார்- காண்பார்- என்பன- சில
வியங்கோள் முற்று என்று கொண்டு அவற்றிற்கு எதிர்மறையாய்ப் படாது ஒழிவார் -
என ஏவற்பொருளவாய் நின்றன என்றலும் ஒன்று. அன்றி, மார் ஈறு ஆமாகில்
இங்ஙனம் ஏவல் பொருண்மையை உணர்த்துமாறு இல்லை என்க.

இனிக் கரியன், கரியான், கரியள், கரியாள் கரியர், கரியார் என வினைக்குறிப்பு
வந்தன காண்க. பிறவும் அன்ன. 6
 

விளக்கம்
 

நிறுத்தமுறை, 229ஆம் நூற்பாச் செய்தி,