சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-6287

படர்க்கையின் ஐந்து பால்களுக்குள் உயர்திணைக்குரிய மூன்று பால்களுக்கும்
உரியவினைமுற்று விகுதிகள் இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ளன.

அன், ஆன்- ஆண்பால்; அள், ஆள்- பெண்பால்; அர், ஆர், ப, மார்-
பலர்பால். இவற்றுள் ப, மார் என்பன எதிர்காலம் காட்டும்; ஏனைய விகுதிகள்
இடைநிலை பெற்று மூன்று காலமும் காட்டுவனவாயும் வினைக்குறிப்பாயே
வருவனவாயும் உள்ள முற்றுக்களின் இறுதிநிலையாகும். பொதுவாக முற்றுக்கள்
பெயரையே கொண்டு முடிதல் வேண்டும்; வினையெச்சமே வினைகொண்டு முடியும்;
ஆனால் மார் ஈற்றுவினை வினைகொண்டு முடிந்தாலும் முற்றாகவே கொள்ளப்படும்
என்பது.
 

  புக்கனன்- க்- இடைநிலை; அன் சாரியை.
உண்டனன்- ட் ” ”
உரைத்தனன்- த் ” ”
தின்றனன் - ற் ” ”

அஞ்சினன்- அஞ்சு- குற்றியலுகர ஈற்றுப்பகுதி; இன் இடைநிலை. உரிஞினன்
முதலிய மெய்யீற்றுச் சொற்களினும் இன் இடைநிலை. எனவே, க் ட் த் ற் இன என்பன
இறந்த கால இடைநிலைகள் ஆம். ஆநின்று, கின்று, கிட, இரு- என்பன நிகழ்கால
இடைநிலைகள்.

மொழிகுவன்- மொழி பகுதி; கு- சாரியை; வ்- இடைநிலை; அன்- விகுதி.

உரிஞுவன்- உரிஞ்- பகுதி; உ-சாரியை; வ்-இடைநிலை; அன்-விகுதி.
புக்கனன்- புகு+க்+அன்+அன்-புகு-பகுதி; க்-இடைநிலை; அன்-சாரியை; அன்-விகுதி.
புக்கான்- புகு+க்+ஆன்-ஆன் ஈறு வந்தவிடத்துச் சாரியை இன்று.