சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-7,8291

நின்றது, பிற்காலத்தில் இது பொதுவினையாயிற்று. எனினும், நன்னூலாரும் இவரும்
பழைய மரபினை வழாநிலை எனவும், புது மரபினை வழுவமைதி எனவும்
கொள்வாராயினர். யார் என்பது இருதிணைப் பொதுவினை என்பதனை, இவரை
யடுத்துத் தோன்றிய இலக்கணக்கொத்துநூலார் வேறில்லை உண்டுயார் வேண்டும்
தகும்படும்’ (இ.கொ.85) என்ற நூற்பாவில் விளக்கியுள்ளார்.

இனி, பலர்பாலுக்கே உரிய யாவர் என்ற பெயர் மருவி வகரம் கெட்டு யார்
எனவரும். அது பலர்பாலையே காட்டும் பெயர் என்பதும் அறிக. யார் என்ற பெயர்,
யார் என்ற வினைக்குறிப்பு இவற்றின் வேறுபாடும் உணர்க.

உரை நச்சினார்க்கினியர் தொல். சொல். 212 ஆம் நூற்பாவில் உரைத்ததேயாம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘யாஅர் என்னும் வினாவின் கிளவி
அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே.’

தொல்.சொல்.210.

  ‘யார்எனும்சொல் முப்பாற்கும் எய்தும்.’

நே.சொல்.41

  முழுதும்

நன். 349

  ‘ஆண்பெண் பலரொடும் யார்எனும் மொழிவரும்.’

மு.வீ.வி.13


அஃறிணை இருபாற் படர்க்கை வினைமுற்று
 

234 துறுடுக் குற்றிய லுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கையும் அஆ ஈற்ற
பலவின் படர்க்கையும் பகரும்மன் அவற்றுள்
டு-இறு கிளவி குறிப்பிற்கு ஏற்றலும்
ஆஈறு எதிர்மறைக்கு ஆகலும் உரிய.
 

இஃது அஃறிணை இருபால் படர்க்கை வினைமுற்று ஆமாறு கூறுகின்றது.