என உயர் திணைக்கண்ணும் வந்ததால் எனின அவை களைந்தான்- வியந்தான்- இழிந்தான்- என்பனவற்றிற்கு மறையாய்க் களைந்திலன்- வியந்திலன் இழிந்திலன்- என நிற்கின்றவை- களைந்தன்றுமிலன் வியந்தன்றுமிலன்- இழிந்தன்றுமிலன்- எனமுற்று வினைத்திரி சொல்லாய் நின்றன.இனி, வினைக் குறிப்பின்கண் மூன்று காலத்திற்கும் உரியவாய், குழையது- நிலத்தது- மூவாட்டையது- வெண்கோட்டது- கரிது- நடைத்து- எனத் துவ்வீறும், குழையிற்று- மேற்று- வைகற்று- மருப்பிற்று- வடிவிற்று- செலவிற்று- என-றுவ்வீறும், குண்டுகட்டு- குறுந்தாட்டு-என டுவ்வீறும்வரும். இனி, அகரஈறு மூன்று காலமும்பற்றி வரும். அவற்றுள் இறந்தகாலம் பற்றிவருங்கால், தொக்கனதொக்க-உண்டன உண்ட- வந்தன வந்த-சென்றன சென்ற-என, கடதறஎன்னும் இடைநிலை எழுத்துக்களின் முன் அன்சாரியை பெற்றும், பெறாதும், அங்ஙனமன்றி எஞ்சின- தப்பின எனவும், உரிஞின- நண்ணின- பொருநின- திருமின- துன்னின எனவும், போயின- சேரின- சொல்லின- வவ்வின- துள்ளின- எனவும், குற்றியலுகரத்தின் முன்னும் ஙகாரம் ஒழிந்த மெல்லெழுத்துக்களின் முன்னும் ழகாரம்ஒழிந்த இடை எழுத்துக்களின் முன்னும் இடைநிலை இன்பெற்றும், போயன |