சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

294 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

என அன் இடைநிலை பெற்றும், போய என யகர இடைநிலை பெற்றும், போன என
னகர இடைநிலை பெற்றும் வரும்.

இனி நிகழ்காலம் பற்றி வருங்கால், உண்ணாநின்றன- உண்ணாநின்றன-
உண்கின்றன- உண்கின்ற- என ஆநின்றுகின்று என்னும் இடைநிலைகளின் முன்
அன்சாரியை பெற்றும் பெறாதும் வரும்.

இனி எதிர்காலம் பற்றி வருங்கால், உண்பன- உண்ப- வருவன- வருவ- எனப்
பகர வகர இடைநிலை எழுத்துக்களின்முன் அன் பெற்றும் பெறாதும் வரும்.

உரிஞுவன உரிஞுவ-உண்குவன உண்குவ-என முதல் நிலை இறுதிக்கண் உகரம்
பெற்றும் ககரஉகரம் பெற்றும் வருதலும் ஏற்புழிக் கொள்க.

இனி, ஆகாரம் உண்ணா-தின்னா- எனக் கால எழுத்துப் பெறாது எதிர்காலத்துப்
பயின்று வரும்.

இனி, அகர ஈறு வினைக் குறிப்பின்கண் மூன்று காலத்திற்கும் உரித்தாய்க்
குழையன- குழைய-நிலத்தன- நிலத்த- மூவாட்டையன- மூவாட்டைய- வெண்கோட்டன-
வெண்கோட்ட- கரியன- கரிய- நடையன- நடைய- என அன்பெற்றும் பெறாதும் வரும்.

இனி வகர ஈறும் ஓதுப அஃது ஈண்டு அகர ஈற்றுள் அடங்கும்.

இன்று இல-கோடின்று கோடில-கோடு உடைத்து கோடு உடைய- அதுவன்று
அவையல்ல- உளதுஉள- பொன்னன்னது பொன்னன்ன என்பன போல ஒருமை
உணர்த்துவனவும் பன்மை உணர்த்துவனவும் ஆகிய வினைக்குறிப்பு முற்றுக்களும்
இவற்றுள்ளே அடங்குமாறு அறிந்து அடக்கிக் கொள்க. வந்திலது, வந்தில- என்பன
முதலியவற்றின்மறைவாய்பாடும் அறிக. ஒன்றன் படர்க்கை பலவின் படர்க்கை எனவே
அஃறிணையாம் என்பதூஉம் பெற்றாம். 8