சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-8295

விளக்கம்
 

  துறு டு- அஃறிணை ஒருமை வினைமுற்று விகுதி.
அ,ஆ- அஃறிணைப் பன்மை வினைமுற்று விகுதி.
டு-குறிப்பு வினைக்கே வரும். ஆ- எதிர்மறைக்கே வரும்.
 

று-இறந்தகாலமே பற்றி வரும். துவ்விகுதியும் அ-விகுதியும் மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றிவரும் என்று கொள்க.
 

  புக்கது- புகு+க்+அ+து- க்-இடைநிலை
உண்டது- உண்+ட்+அ+து- ட்-இடைநிலை
வந்தது- வா+த்+அ+து- த்-இடைநிலை
சென்றது- செல்+ற்+அ+து- ற்-இடைநிலை
உறங்கினது- உறங்கு+இன்+அ+து- இன்-இடைநிலை
எஞ்சியது (முதலியன)- எஞ்சு+இ+ய்+அ+து
உரிஞியது (முதலியன)-உரிஞ்+இ+ய்+அ+து
போயது- போ+ய்+அ+து
யகர உயிர்மெய் என்பார் ஆசிரியர்.
போனது- போ+ன்+அ+து
னகர உயிர்மெய் என்பார் ஆசிரியர்.
நடவா நின்றது- நட+ஆநின்று+அ+து
நடக்கின்றது- நட+க்+கின்று+அ+து; க்-சந்தி
நடப்பது - நட+ப்+ப்+அ+து; முதல் ப்-சந்தி
வருவது- வா+வ்+அ+து
புக்கன்று- புகு+க்+அன்+று
உண்டன்று- உண்+ட்+அன்+று
வந்தன்று- வா+த்+அன்+று
சென்றன்று- செல்+ற்+அன்+று
கூயின்று-கூ+இன்+று இன்பெற்றுத்
உறங்கின்று- உறங்கு+இன்+று திரியாதது.
கூயிற்று- கூ+இன்+று இன் பெற்றுத்
உறங்கிற்று- உறங்கு+இன்+று திரிந்தது.
உண்டின்று- உண்+ட்+இல்+று
வந்தின்று- வா+த்+இல்+று
சென்றின்று-செல்+ற்+இன்+று