சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

300 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘ஆஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆவே எதிர்மறைக் கண்ணது ஆகும்’-

‘ஆஆ வகர இறுதிக் கிளவி
அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சொல்லே’.

‘துடுறுக் குற்றிய லுகர ஈற்ற
அத்திணை ஒன்றன் படர்க்கைச் சொல்லே.’
‘இன்று இல உடைய அன்று உடைத்து அல்ல
என்பன பிறவும் வினைக்குறிப் பாகும்.’
 
நன்.329



மு.வீ.வி. 18


19

21
 

எவன் என்பதன் பாற் பொதுமை
 

235 எவன்என் வினாவினைக் குறிப்புஇழி இருபால்.
 
 

இஃது அஃறிணை வினைக்குறிப்பினுள் ஒன்றற்குப் பால் வகையான் பொதுமை
கூறுகின்றது.

இ-ள்: எவன் என்னும் வினாப்பொருளை உணர்த்தும் வினைக்குறிப்பு
முற்றுச்சொல் அஃறிணை மருங்கின் இருபாற்கும் உரித்து என்றவாறு.

வரலாறு: அஃதெவன், அவைஎவன்- என வரும்.

நுமக்கு இவன் எவனாம் என உயர்திணைக் கண்ணும் வருமாலோ எனின், ஆண்டு
அது முறைபற்றி நிற்றலின் அஃறிணைக்கண் வந்தது எனவே படும் என்பது. அஃதேல்,
நுமக்கு இவன் என்ன முறையனாம் என்பது அல்லது என்ன முறையாம் என்பது
பொருந்தாது எனின், என்னமுறை என்பது ஆண்டு முறைமேல் நில்லாது ஒற்றுமை
நயத்தான் முறை உடையான் மேல் நிற்றலின் பொருந்தும் என்க. படுத்தல் ஓசையான்
எவன் என்பது பெயரும் ஆம். அஃது இக்காலத்து என் என்றும் என்னை என்றும்
மருவிற்று. 9
 

விளக்கம்
 

எவன் என்பது அன்ஈற்றச்சொல் போல இருப்பினும், அஃது உயர்திணை
வினையாகாது அஃறிணை வினையாகவே