சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

304 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

செய்யும் என்பதில் உம் ஈறு தொல்காப்பியனார் காலத்தில் நிகழ்காலம், எதிர்காலம்
இரண்டனையும் உணர்த்தியது. பிற்காலத்தில் செய்கின்ற என்ற சொல்லில் கின்று என்ற
இடைநிலை நிகழ்காலம் உணர்த்தினமையின் உம் ஈறு எதிர்காலம் ஒன்றே
காட்டுவதாயிற்று.
 

  ‘திரிபு வேறுபடூஉம்’ என்பது சேனாவரையர் பாடம்;
‘பிரிபு வேறுபடூஉம்’ என்பது நச்சினார்க்கினியர் பாடம்;
இதன் விளக்கமும் நச்சினார்க்கினியர் விளக்கமே.
 


(தொல்.சொல். 224)

உண்டான் என்ற சொல்லில் உண்ணுதல் வினை அகநிலைச் செயப்படுபொருளாய்
நிற்றலின், உண்ணுதலைச் செய்தான் என விளக்கி விரிக்குமிடத்து, உண்ணுதலை வினை
என்றும், செய்தலைத் தொழில் என்றும் பெயரிடுதல்,

‘வினையே செய்வது’ (தொல்.சொல்.112) என்ற நூற்பாவுரையிலும் கூறப்பட்டது.
எல்லாவினைச்சொற்களிலும் வினைப்பகுதியை வினையாகவும் செய்தலைத் தொழிலாகவும்
கோடலே தொல்லாசிரியர் மரபு. எல்லாத் தொழிலும் செய்தல் வேறுபாடு
ஆகலின்.............இயையாதாம் என்க’ என்பது சேனாவரையர் உரை. தொல்.சொல். 222

சொல்லுவான் உயர்திணை அஃறிணை என்று அறிந்து சொல்லினும்
அச்சொல்லினுள் உயர்திணை அஃறிணை என்று வரையறுத்துப் பாகுபாடு செய்தற்குரிய
கருவி இன்மையின் விரவுத்திணை என்பதும் கொள்ளப்பட்டது. விரவுத்திணை
கொள்ளப்படவே விரவுத்திணைப் பெயரும், விரவுத்திணை வினையும் உளவாதல்
உணரப்படும்.

உரைச்செய்தி பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் சொற்படல
224 ஆம் நூற்பாவில் சொற்றனவே.