சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

308 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

உண்பாம்- உரிஞுவாம்- உண்குவாம், யானும் அவனும் உண்பெம்- உரிஞுவெம்-
உண்குவெம்- உண்பேம்- உரிஞுவேம்- உண்குவேம்-உண்போம்-உரிஞுவோம்-
உண்குவோம் எனவும், யானும் நீயும் அவனும் உண்கும்-உண்டும்- வருதும்-சேறும்
உரிஞுதும் திருமுதும்- எனவும் வரும். இவை அன்பெறும் விகற்பமும் உகரமும் குகரமும்
பெறுதலும் முற்கூறியவாறே காண்க.

இனிப் ‘பாற்பட’ என்றதனானே, அம் ஆம் என்பன தமராயவழிப்
படர்க்கையாரையும் உளப்படுத்தல் கொள்க. தன்மைஇருதிணைக்கும் பொதுவாதல்
விரவுப்பெயர் உரைத்த வழி உரைத்தாம். அதனானே
 

  ‘யானும் என் எஃகமும் சாறும் அவனுடைய
யானைக்கும் தானைக்கும் போர்’
 
 
என்புழி-தும் ஈறு அஃறிணைப் படர்க்கையை உளப்படுத்தல் வழுவமைதி அன்று; ஈண்டைக்கு வழாநிலையேயாம் என்க.
 
  ‘இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து’

குறள். 205

என்ப ஆகலின், தனித்தன்மைக்கண் அன்விகுதியும், வழக்குப் பயிற்சியான்
உளப்படுத்தன்மைக்கண் ஓம் விகுதியும் உடன் ஓதினார். தன்மைக்கு ஒருமை யல்லது
இன்மையின் தன்மைப் பன்மையாவது அதனொடு பிறரை உளப்படுத்தலேயாம் என்பார்,
‘தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை’ என்றார்.

இனி, கரியன்- கரியென்- கரியேன்- எனவும், கரியம்- கரியெம்- கரியேம்-
கரியோம்- எனவும்- வினைக்குறிப்பும் வந்தன காண்க. பிறவற்றொடும் ஒட்டுக.

காண்கு வந்தேன், காண்கும் வந்தேம்- எனச் செய்கு என் ஒருமையும் செய்கும்
என் பன்மையும் வினைகொண்டு முடிந்தவாறு காண்க.