சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-11313

செய்கு பற்றிய செய்தியாவும் சேனாவரையர் உரைத்தனவே. (தொல்.சொல் 204)
ஏனைய நச்சினார்க்கினியர் சொற்றன. (205, 206)

தன்மைக்கு அன் விகுதியும், ஓம் விகுதியும் பிற்காலத்துப் புதுவன புகுதல் என்பது
விளக்கப்பட்டது. அன்ஈறு தெரிநிலை வினைக்கண் எதிர்காலத்திற்கே வரும்
என்றாரேனும், இக்காலத்து யான் உண்டனன்- யான் உண்ணாநின்றனன்- என
ஏனைக்காலத்தும் வருதல் உணரப்படும். அன் ஈறு கரியன் எனக் குறிப்பு முற்றாய்
வருமாறு கூறப்பட்டது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘கடதற என்னும்
அந்நான்கு ஊர்ந்த குன்றிய லுகரமொடு
என் ஏன் அல்லென வரூஉம் ஏழும்
தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.’

‘அவற்றுள்
செய்குஎன் கிளவி வினையொடு முடியினும்
அவ்வியல் திரியாது என்மனார் புலவர்.’

‘அம்ஆம் எம்ஏம் என்னும் கிளவியும்
உம்மொடு வரூஉம் கடதற என்னும்
அந்நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்
பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.’

‘......... ........ தன்மை தன்இறப்பில்
தேயாத- தேன்ஏனும் தேம் ஏமும் தோம் ஓமும்
ஆகும் என்ப.’

‘.........நிகழ்ச்சி இதன்கண்தன்மை
கிறேஎன்நின் றேன்கிறேம் நின்றேம் கிறோமும்
நின்றோமும்என்றாம்’.




தொல்.சொல். 203


204




202



வீ.சே. 76



77