சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-13321

வியங்கோள் முற்று
 

239 கயவொடு ர ஒற்று அல்ஆல் உம்மார்
ஐதான் ஈற்ற வியங்கோள் முற்றுஅவை
எய்தும் இடம்பால் எங்கும் என்ப.
 
 

  இது வியங்கோள் முற்று உணர்த்துகின்றது.

  இ-ள்: அகர உயிரொடு கூடிய ககரயகரங்களும் ரகர ஒற்றும் அல்லும் ஆலும்
உம்மும் மாரும் ஐயும்ஆகிய எண்வகை விகுதியையும் ஈறாக உடைய சொற்கள்
வியங்கோள் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களாம். அம்முற்றுச் சொற்கள் ஐம்பால்
மூவிடங்களிலும் செல்லும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

  வரலாறு: அவன்செல்க- அவள்செல்க- அவர்செல்க- அதுசெல்க- அவைசெல்க-
என உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்து என விதித்தல் பொருண்மைக்கண்ணும்,
அவன்வாழ்க- அவள்வாழ்க- அவர்வாழ்க- அதுவாழ்க- அவை வாழ்க எனவும்,
 

  ‘அமுதம் உண்கநம் அயல்இல் லாட்டி’ குறுந்.
‘அருளிலர் கொடாமை வல்லர் ஆகுக’ புறம்.
‘வெல்க வாழிநின் வென்றி வார்கழல்
செல்க தீயன சிறக்கநின் புகழே’ சூளா. சீயவதை.
‘எனவும் வாழ்த்துதல் பொருண்மைக் கண்ணும்,
‘யானும் நின்னோடு உடன் உறைக’ எனவும்
‘கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர்’
‘கேட்டு இது மறக்க நம்பி’ சிவ.
201
27

5



475