விளக்கம் |
முன்னர்கூறிய இடம்- 166 ஆம் நூற்பா. தொல்காப்பியனார் தன்மையை உயர்திணை என்பர். பின்னுள்ளோர் பலருக்கும் தன்மை இருதிணைக்கும் பொது என்பதே கருத்தாதல் அறிக. |
| ‘நீயிர் நீஎன வரூஉங் கிளவி பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள.’
‘ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே சுட்டுங்காலை.’
‘இன்ன பெயரே இவையெனல் வேண்டின் முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்.’ |
தொல்.சொல்.188
191
193 |
என்ற தொல்காப்பிய நூற்பாவானும் நீயிர்- நீ- ஒருவர் என்ற சொற்கள் குறிப்பாலேயே திணையும் பாலும் விளக்கும் என்பது பெறப்படும்.மழை பெய்தலான் முல்லை அருபுதலும், நிலன் நீர் தீ வளி விசும்பு என்ற ஐந்து பூதங்களின் சேர்க்கையான் உடம்பு தோன்றுதலும் உட்கொண்டு எடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டன. |
| ‘எத்திணை மருங்கினும் மகடூ மடன்மா பொற்புடை நெறிமை இன்மை யான.’
‘கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்’ |
(தொல்.பொருள்-3)
குறள். 1137 |
என்பனவற்றை உட்கொண்டு மடலேறுதல் ஆண்பாற்கே உரிய செயல் என்று வரையறுத்து, ‘ஒருவரான் அரிய மடல் பெற்றேன்’ என்ற எடுத்துக்காட்டில் கூறுவோன் ஆண்பாலாக, ஒருவர் என்பது பெண்பாலாதல் குறிப்பால் |