என்ற தொல்காப்பிய நூற்பாவினால் வினைச்சொற்கள் போலப் பெயர்ச்சொற்கள் படர்க்கையினும் ஈறு பற்றிப் பால் விளக்குதல் திரிபின்றி அமைவது ஒன்று அன்று என்பது போதரும்.அவன், பெண்மகன், மகன்- னகரஈறு ஆண்பாலினையும் பெண்பாலினையும் விரவுத்திணையையும் உணர்த்தியது. பெருமாள், கோமாள், மகள் - ளகரஈறு ஆண்பாலினையும் பெண்பாலினையும் விரவுத்திணையையும் உணர்த்தியது. நம்பி, பெண்டாட்டி - இகரஈறு ஆண்பாலினையும் பெண்பாலினையும் உணர்த்தியது. ஆடூ, மகடூ - ஊகாரஈறு ஆண்பாலினையும் பெண்பாலினையும் உணர்த்தியது. ஆகவே, படர்க்கைப் பெயர்கள் திரிபின்றிப் பால்விளக்கும் படர்க்கைவினை போல்வனவல்ல என்ற சேனாவரையர் உரையையும் நோக்குக. இதனை உட்கொண்டே, தொல்காப்பியனார் படர்க்கை வினைமுற்றே திரிபின்றிப் பால்விளக்கும் என்பதனை |