சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-18343

செய்யும் என்னும் உம் ஈற்று முன்னிலைப்பன்மை வினை முற்றுப்பற்றிய செய்தி
ஆசிரியர் வரைந்தன. ஏனைய தொல்காப்பிய உரையாசிரியர்கள் முதலியோர் சொற்றன.

ஒத்த நூற்பாக்கள
 



 

‘அவற்றுள்,
செய்யும் என்னும் பெயர்எஞ்சு கிளவிக்கு
மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்
அவ்விடன் அறிதல் என்மனார் புலவர்.’

‘உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே.’
முழுதும் -
‘உம்ஈற்று எச்சத்து ஈறும் ஈற்றயல்
உயிரும் உயிர்மெய்யும் ஒழிதலாம் செய்யுட்கு
உம்உந்து ஆகலும் ஒக்கும் என்ப.’

‘செய்யும்என் முற்றே மற்றதன் ஈற்றயல்
உயிரும் உயிர்மெய்யும் ஓழிந்தே அஃகலும்.’




தொல்.சொல்.238
292
 நன். 341, மு.வீ.வி.38


தொ.வி.118


107
 

வினையெச்சம் - சிறப்புவிதி
 

245

 
செய்து செய்யூ முதலவாய் பாட்டின்
தன்வினை பிறவினை ஆயிரு வினையொடு
முடியும் முறையது வினையெச் சம்மே.
 
 

  இது வினையெச்சத்திற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது; இத்துணை
வாய்பாட்டான் நிகழும் எனவும், இவ்வினைச் சொற்களான் முடியும் எனவும்
கூறுகின்றமையின்.

  இ-ள்; செய்து செய்யூ முதலிய வாய்பாட்டான் புலப்பட்டுத் தன்னை நிகழ்த்திய
வினைமுதலான் நிகழ்ந்தவினையும் பிறவற்றின் வினையும் ஆகிய அவ்விருவகை
வினையொடும்